தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2019, 10:27 AM IST

ETV Bharat / state

கம்பத்தில் திருமணமான 5 நாள்களில் புதுமணப்பெண் தற்கொலை!

தேனி: கம்பத்தில் திருமணமான ஐந்து நாள்களிலேயே புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கம்பத்தில் திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை!

தேனி கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சேதுபதி (22). இவருக்கும் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் சிவசக்திக்கும் (18) கடந்த நவம்பர் 1ஆம் தேதி கம்பத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த புதுமணத் தம்பதி ராஜாவின் வீட்டு மாடியில் வசித்துவந்தனர்.

இந்நிலையில், நேற்று சேதுபதி வீட்டிலிருந்து வெளியே சென்றதாகத் தெரிகிறது. அப்போது சிவசக்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதில் வெகுநேரமாகியும் மாடியிலிருந்து சிவசக்தி கீழே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த சேதுபதியின் தாய் புஷ்பவள்ளி மாடியில் உள்ள அறையில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது சிவசக்தி வீட்டின் மேல் சுவரிலிருந்த கொக்கியில் சுடிதார் துப்பட்டாவை மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைப் பார்த்த புஷ்பவள்ளி அலறி சத்தமிட்டதில் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து தூக்கில் தொங்கிய சிவசக்தியை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் கம்பம் வடக்கு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கம்பத்தில் திருமணமான 5 நாள்களில் புதுமணப்பெண் தற்கொலை!

தகவலறிந்து வந்த காவல் துறையினர் இறந்த சிவசக்தியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருமணமான ஐந்து நாள்களில் புதுமணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details