தமிழ்நாடு

tamil nadu

எகிறும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை: திணறும் தேனி

By

Published : Jul 30, 2020, 3:00 AM IST

தேனி: தேனி மாவட்டத்தில் வங்கி ஊழியர், தலைமைக் காவலர், அங்கன்வாடி பணியாளர் உள்ளிட்ட 131 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனியில் இன்று ஒரே நாளில் 131நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு
தேனியில் இன்று ஒரே நாளில் 131நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு

உலகளாவிய பெருந்தொற்றான கரோனாவின் பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. இந்தியளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் மிகத் தீவிரமடைந்து வருகிறது. தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனாவின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக நீதிமன்றம், காவல் காண்காணிப்பாளர் அலுவலகம், அரசு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் ஊழியர், உத்தமபாளைய காவல் நிலைய தலைமைக் காவலர், நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் என இன்று (ஜூலை 29) ஒரே நாளில் 131 நபர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவர்களது சளி, ரத்த மாதிரிகள் தேனி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் அனைவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கரோனா தொற்றின் காரணமாக இதுவரை 4 ஆயிரத்து 468 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details