தேனி மாவட்டம் போடி நந்தவன தெருவைச் சேர்ந்தவர் வளர்மதி (30). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பி.எல். ராம் என்ற இடத்தில் ஏலக்காய் தோட்டம் உள்ளது. அதனை பராமரித்து வந்த வளர்மதி, ஏலத்தோட்டத்திற்கு செல்வதற்காக ஜீப்பில் சென்று வருவது வழக்கம். பி.எல்.ராம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜா (30) என்பவரது ஜீப்பில் சென்று வந்துள்ள வளர்மதிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கும் திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. இருவருக்கிடையேயான இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி பல வருடங்களாக நீடித்து வந்துள்ளது.