தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகேவுள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரமேஷ் (45). இவரது மனைவி தெய்வபாக்கியம் (36). இவர்களுக்கு, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் வழங்கிய 15 சவரன் நகை, பணத்தை தனது குடிப்பழக்கத்தால் அழித்த ரமேஷ், மீண்டும் 50 ஆயிரம் ரூபாயை பெற்றோர் வீட்டில் வாங்கி வரும்படி தெய்வபாக்கியத்தை துன்புறுத்தி, சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இதனால், மனம் வெறுத்த தெய்வபாக்கியம் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக் கொண்டார். பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி அக்டோபர் 21ஆம் தேதி உயிரிழந்தார்.