தேனி: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. நூற்பாலை மில் தொழிற்சாலையில் பணிபுரிந்த இவரும், அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரம்ஜான் பேகம் என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். காதலுக்காக வடிவேலு அப்போதே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பின் அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் குடியேறி, வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வடிவேல் என்ற அபூபக்கர் சித்தீக் வி.ஆர்.பி தெருவில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதனிடைய கணவன் வடிவேல் என்ற அபூபக்கர் சித்திக் மேலும் சில பெண்களிடம் தொடர்பிலிருந்து வந்ததால், கணவன் மனைவிக்கும் இடையே கடந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை ரம்ஜான் பேகம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அவரது உறவினர்களுக்குத் தெரிவித்து, வீட்டில் துக்க நிகழ்வு காணப் பந்தல் போடப்பட்டது.
ஆனால் ரம்ஜான் பேகத்தின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் ரம்ஜான் பேகத்தின் உடலை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர்.