தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லை பெரியார் அணை நீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லை பெரியார் அணையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

mullai
mullai

By

Published : Jul 7, 2022, 6:05 PM IST

தேனி:தேனி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.. நேற்று(ஜூலை 6) நிலவரப்படி நீர் திறப்பு ஆயிரத்து 678 கனஅடியாக இருந்தது.

நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், வைகை அணைக்கு செல்லும் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும், எனவே கூடலூர், உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்றும், எனவே பொதுமக்கள் நீர்நிலைகளில் குளிப்பது, செஃல்பி எடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details