தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தேவராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடமலைக்குண்டு துணை மின்நிலையத்தில் தற்காலிக ஊழியராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடமலைக்குண்டு பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும்போது மின்சாரம் தாக்கி முருகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மின் ஊழியரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.