தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனையும் அக்கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களான இருவரும், ஆண்டிபட்டி தொகுதிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது முதல் நாளிலே தங்களது பலத்தை வெளிக்காட்ட ஆயத்தமாகினர்.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் அடுத்தடுத்து தொகுதிக்கு வருகை புரிந்த அண்ணன், தம்பிகளை வரவேற்பதற்கு திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் ஆயிரக்கணக்கானோர் கூடி வழிநெடுங்கிலும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.