கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் அறிகுறியுடன் 41 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இதையடுத்து, அவர்கள் வசித்த பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அவர்களில் 18 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கரோனா பாதுகாப்புக் காரணங்களுக்காக, மேலும் 14 நாள்கள் வீட்டுக் கண்காணிப்பிலிருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
அவர்கள் வசிக்கும் பகுதிகளில் பொது மருத்துவ சுகாதாரத் துறை சார்பிலும், நகராட்சி, பேரூராட்சி சார்பிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் வெளியே சென்றுவர தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தகுந்த பாதுகாப்புடன் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.