தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 17, 2020, 3:21 PM IST

ETV Bharat / state

தேனியில் இரண்டு பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

தேனி: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

dengu-attacked-women
dengu-attacked-women

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்குட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த பானு, பெருமாள்புரத்தைச்சேர்ந்த ஈஸ்வரி ஆகிய இரண்டு பெண்களும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில், இருவரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு டெங்குப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, இவர்கள் இருவரையும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பிரிவில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டு பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் டெங்கு பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சுகாதாரத்துறையினர் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:பேருந்துகளை மறித்து ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details