தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதில் பெரியகுளம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்திருந்தது. இந்நிலையில், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 8 செவிலியர்கள், 13 மருத்துவ பணியாளர்களுக்கு நேற்று (ஜூலை 25) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர பெரியகுளம் கிளைச்சிறைக் காப்பாளர் மற்றும் பெண் பயிற்சிக் காப்பாளர் ஆகியோருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் பணிபுரிந்த இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. பெரியகுளம் மருத்துவமனையில் பணியில் இருக்கும் பிற மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் கிளைச் சிறையில் பணிபுரிபவர்களுக்கும் சுகாதாரத் துறையினர், கரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர்.