தேனி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்தது. இதில் பொதுமக்கள் பல இடங்களில் வாக்களித்தனர். இதனால் காவல் துறையினரின் கவனம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு, பாதுகாப்பில் இருந்தனர்.
இதனைப் பயன்படுத்தி இரண்டு பேர் தலைக்கவசம் அணிந்து தேனி பழனிசெட்டிப்பட்டி, உத்தமபாளையம், கம்பம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியாக பைக்கில் சென்ற தம்பதிகளை கவனத்தில்கொண்டு நகைப்பறிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் உத்தமபாளையம் பகுதியில் இரண்டு வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட முயன்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தக் கும்பலைப் பிடிக்க தேனி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்தார். நகைப்பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.