தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணை முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பெண் மீது வழக்குப்பதிவு! - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: துணை முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பெண் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துணை முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த பெண்
துணை முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த பெண்

By

Published : Jan 22, 2021, 7:29 AM IST

தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொது மக்களிடம் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற பூதிப்புரம் பேரூராட்சியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தொகுதிக்குள் வந்தால் கொலை செய்யாமல் விடமாட்டேன் என ஆத்திரத்தில் கூறினார். அப்பெண்ணின் பேச்சை மு.க.ஸ்டாலின் கண்டித்தார்.

துணை முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த பெண்

இதுகுறித்து அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அப்பெண் மீது மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருடவந்த இளம் பெண்ணை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details