கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த மார்ச் முதல் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இதனால் தமிழ்நாடு – கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலிருந்து குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய மலைச்சாலைகளில் பொதுப் போக்குவரத்திற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும் தேனியிலிருந்து, குமுளிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. ஆனால் தேனி வழியாக கேரளாவிற்குச் செல்பவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என அனைவரும் இ -பாஸ் அனுமதி பெற்றுச் சென்றுவந்தனர்.