தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2019, 9:27 AM IST

ETV Bharat / state

குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி கருப்புத் துணி கட்டி பேரணி

தேனி: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி முகத்தில் கருப்புத் துணி கட்டி, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக கண்டன பேரணி நடைபெற்றது.

aiyf protest against CAA in theni
aiyf protest against CAA in theni

மத்திய பாஜக அரசு தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கடந்த திங்கட்கிழமை இரு அவைகளிலும் அமல்படுத்தி நிறைவேற்றியது. இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் புறக்கணித்துக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு இரண்டும் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரானதாகும் என்று நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்துவருகிறது.

இந்நிலையில் இந்தக் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெறக்கோரி தேனி மாவட்டம் சின்னமனூரில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னமனூர் மார்க்கையன்கோட்டை சந்திப்பில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தங்களது முகத்தில் கருப்பு துணி கட்டியபடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கருப்புத் துணி கட்டி ஆர்பாட்டம்

மேலும், ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன. இதனையடுத்து அனுமதியின்றி முகத்தில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


இதையும் படிங்க: அமெரிக்க ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

ABOUT THE AUTHOR

...view details