தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது டொம்புச்சேரி கிராமம். இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியில் உள்ள கிழக்கு காலனி பகுதியில் முருகன்-பூவாயி என்ற வயதான தம்பதியினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளை திருமணம் செய்துகொடுத்த சூழ்நிலையில் மகன், கணவர் செய்யும் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வாழ்ந்துவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக பூவாயி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துவந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் அதிகரித்ததன் காரணமாக பூவாயி பரிதாபமாக உயிரிழந்தார்.