தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 15, 2020, 7:17 AM IST

Updated : Jun 15, 2020, 9:49 AM IST

ETV Bharat / state

பரிசோதனைக்கு மறுத்து காவலர்களை ஆபாசமாகத் திட்டிய மருத்துவர்!

தேனி: ஆண்டிபட்டி சோதனைச்சாவடியில் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து மருத்துவர் ஒருவர் காவல் துறையினரை ஆபாசமாகத் திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காவல்துறையினரை திட்டும் மருத்துவர் கணொலி
காவல்துறையினரை திட்டும் மருத்துவர் கணொலி

தேனி மாவட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல் எல்லைகளான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடி, ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடி, கேரள மாநில எல்லைகளான லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய சோதனைச்சாவடிகளில் புதிதாக வருபவர்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நேற்று வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேனியிலிருந்து மதுரை நோக்கிவந்த காரை நிறுத்தி காவல் துறையினர் சைகை காட்டியுள்ளனர். ஆனால் காரை நிறுத்தாமல் காவல் துறையினரை இடித்துத் தள்ளுவதுபோல வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதனால் அந்தக் காரை பின்தொடர்ந்த காவல் துறையினர் சிறிது தூரத்தில் மடக்கிப்பிடித்தனர். அதன்பின் காரிலிருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரிக்கையில், காரை ஓட்டிவந்தவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவரும் சாலமன்ராஜா என்பது தெரியவந்தது.

அதையடுத்து அவரையும், அவருடன் வந்தவர்களையும் பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல் துறையினர் கேட்டுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சாலமன்ராஜா, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதத்தில் சாலமன்ராஜா காவலர்களை ஆபாசமாகப் பேசி, தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.

காவல் துறையினரை திட்டும் மருத்துவர் காணொலி

அதையடுத்து காவல் துறையினர் அவரையும், உடன் வந்தவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனைப் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா எதிரொலி: மாநில எல்லைகளில் சோதனையைத் தீவிரப்படுத்திய காவல் துறை!

Last Updated : Jun 15, 2020, 9:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details