மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்துவருகின்றது. இவற்றில் பெரியகுளம், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த நான்கு நாள்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழையால் கும்பக்கரை, சோத்துப்பாறை, மஞ்சளாறு உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (செப்.4) மதியம் முதல் பெய்ய தொடங்கிய மழையானது மாலைவரை விடாமல்பெய்து இரவுவரை நீடித்தது. இதன் காரணமாக பெரியகுளம் நகராட்சிக்குள்பட்ட 28ஆவது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் மாரியம்மாள், தங்கம் ஆகிய இருவரது வீடுகளின் ஒரு பக்கச் சுவர் அடியோடு இடிந்து விழுந்தது.