தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் மீட்பு - 3 people rescued Swept away in the flood Near Theni

தேனி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3 people rescued Swept away in the flood Near Theni
3 people rescued Swept away in the flood Near Theni

By

Published : Jun 14, 2022, 11:01 PM IST

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மலைப்பகுதியில் ஊத்தம்பாறை ஆறு அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு இளைஞர்கள் அதிக அளவில் வந்து குளித்துச் செல்கின்றனர். இந்நிலையில் போடியில் மின்சாரத் துறையில் பணிபுரியும் 4 பேர் உத்தம்பாறை ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது ஆற்றின் நீரோட்டம் அதிகமானதால் நீந்த முடியாமல் ஆற்றின் வெள்ளத்தில் தத்தளித்தனர். பின்னர் பாண்டியராஜன் (26), குமரேசன் (32), சுரேஷ் (22) ஆகிய மூன்று பேர் ஆற்றின் மறுபக்கம் உள்ள கரைக்கு சென்றனர். ஆற்றின் வெள்ளத்தை நீந்த முடியாமல் கோகுல் (22) அடித்துச் செல்லப்பட்டார்.

3 பேர் மீட்பு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றின் மறுகரையில் சிக்கிய மூன்று பேரை கயிறு கொண்டு தீவிர முயற்சிக்கு பின் காப்பாற்றினர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கோகுலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:நெல்லை அருகே வம்பிழுத்த காமெடி நடிகர்: கார் கண்ணாடி உடைப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details