தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2023, 5:00 PM IST

ETV Bharat / state

தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 20 சதவீத மாம்பூக்கள் சேதம்!

கடந்த நான்கு ஆண்டுகளாக மா விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பை போக்கி இந்த ஆண்டு மா விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கும் என நம்பி இருந்த விவசாயிகளுக்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக 20 சதவீத மாம்பூக்கள் சேதமடைந்துள்ளன.

தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 20 சதவீத மாம்பூக்கள் சேதம்
தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 20 சதவீத மாம்பூக்கள் சேதம்

தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக 20 சதவீத மாம்பூக்கள் சேதம்

தேனி: பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான கும்பக்கரை, செலும்பு, முருகமலை, சோத்துப்பாறை, லட்சுமிபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு அல்போன்சா, பங்கனம்பள்ளி, காலைபாடி, இமாமஸ், செந்தூரா, கல்லாமை, காசா உள்ளிட்டப் பல்வேறு மா ரகங்களை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றத்தால் 30 முதல் 40 சதவீத அளவில் மட்டுமே மாம்பூக்கள் பூத்தது. மேலும் கடந்த ஆண்டு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே மாம் பூக்கள் பூத்திருந்ததால் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக, மா விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழையும் உரிய நேரத்தில் பெய்ததோடு தற்போழுது இரவில் முழுமையான பனிப்பொழிவும் பகல்பொழுதில் வெயிலும் அடித்து வருவதால் பெரியகுளம் பகுதியில் மா மரங்கள் அனைத்தும் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளது. மேலும் இந்த ஆண்டு மாம் பூக்கள் 70 முதல் 80 சதவீத மாம் பூக்கள் பூத்து குலுங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

இதனிடையே கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்ததால் மா பிஞ்சுகள், உருவாகும் தருவாயில் இருந்த மாம்பூக்கள் என அனைத்தும் அழுகி கருகியதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

மேலும் இது குறித்து மா விவசாயி கூறுகையில், 'கடந்த நான்காண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்து வருவாய் கிடைக்கும்' என நம்பி இருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் 15 முதல் 20 சதவீதமான மாம்பூக்கள் அழுகி சேதமடைந்துள்ளதாக கூறும் விவசாயிகள் 25 முதல் 30 நாட்களுக்கு மழைப்பொழிவு இல்லாமல் இருந்தால் மட்டுமே மீதமுள்ள மாம்பூக்கள் பூத்து மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி - தேனியில் பரபரப்பு

ABOUT THE AUTHOR

...view details