தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அனுப்பபட்டியில் வசித்து வருபவர் குமரேசன் - மாரியம்மாள் தம்பதியினர். சென்னையில் பெயிண்டராக வேலை செய்து வந்த குமரேசன் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட இரு சக்கர வாகனத்தில் காயமடைந்தார். இதையடுத்து தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரேசனின் சிகிச்சை செலவிற்காக அய்யனார்புரத்தில் உள்ள தனது சித்தி, பாப்பாவிடம் உதவி கேட்டுள்ளார்.
அதற்கு சித்தி மகன், நிதீஷ்குமார் அரண்மனைப் புதூரில் உள்ள தனது நண்பன் அழகுபாண்டி மற்றும் அவரது சகோதரன் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மூலம் கடன் பெற்றுத் தருவதாக கூறியுள்ளார். அதன் படி கடந்த 2019செப்டம்பர் மாதம் தனது வீட்டை 100க்கு ஒரு ரூபாய் வட்டி வீதம் 2,50,000 கடன் தருவதாக அரண்மனைப் புதூர் நித்யா என்பவர் கூறியதை அடுத்து ஆண்டிபட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஈட்டுக்கடனாக தனது வீட்டை மாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் கையொப்பமிட்டு பதிவு செய்து தந்துள்ளனர்.
ஆனால் பேசிய படி பணம் தராமலும் வீட்டின் அசல் பத்திரங்களை கைப்பற்றிக் கொண்டு நிதிஷ்குமார், ராஜேஷ்கண்ணன் ஆகியோர் சென்று விட்டதாகவும், அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து மாரியம்மாளை தொடர்பு கொண்ட நித்யா, 100க்கு 3ரூபாய் வீதம் தனது கணவர் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2,50,000 கடன் கொடுத்ததாகவும், அவ்வாறு தராவிட்டால் வீட்டை ஜப்தி செய்து விடுவதாக மிரட்டியதாகவும், தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வீட்டை ஈடாக வைத்து பத்திரப்பதிவு செய்து இரண்டரை லட்சம் மோசடி - Theni latest news
தேனியில் வீட்டை ஈடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்தும், இரண்டரை லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த கும்பல் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![வீட்டை ஈடாக வைத்து பத்திரப்பதிவு செய்து இரண்டரை லட்சம் மோசடி தேனி மாவட்ட செய்திகள் திருட்டு பத்திர பதிவு மோசடி விசாரணை mortgaging the house fraud by mortgaging the house Theni latest news Theni district news](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10304883-184-10304883-1611088750979.jpg)
தேனி மாவட்ட செய்திகள் திருட்டு பத்திர பதிவு மோசடி விசாரணை mortgaging the house fraud by mortgaging the house Theni latest news Theni district news
மேலும் கடன் தொகை தராமல் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நித்யா, நிதீஷ்குமார் உள்பட 7 பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொக்காக மாட்டிக்கொண்ட பேஸ்புக் காதல் வலை மோசடி கும்பல்: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது!