நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியைப் பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்குப் பணிபுரிய அனுப்பிவைக்கப்படுவர்.
கடின பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களில் 60 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிவதற்கான சத்தியப் பிரமாண நிகழ்ச்சி இன்று நடந்தது. பயிற்சிக்குச் செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசியக்கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.