தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர்... தண்ணீர்: நகர்ப்பகுதிக்குள் இடம்பெயரும் வனவிலங்குகள்! - Arid waters in Coonoor forests

நீலகிரி: கடும் வெயில் காரணமாக அருவிகள் வறண்டதால் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் நகர்ப்பகுதிகளுக்கு இடம்பெயருகின்றன.

Wildlife suffering in Coonoor without adequate water
Wildlife suffering in Coonoor without adequate water

By

Published : Apr 10, 2021, 7:56 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வனப்பகுதிகள் பசுமையான சூழலிலிருந்து வறட்சியான சூழலுக்கு மாறிவருகிறது.

இதனால் வனப்பகுதி அருகே உள்ள அருவிகள், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோர அருவிகள் தண்ணீரில்லாமல் வறண்டு காணப்படுகின்றன.

அருவிகள், சிற்றோடைகள் என நீர்நிலைகள் அனைத்தும் வறண்டுவருவதால் யானை, காட்டெருமை காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி சாலையோரங்கள், நகர்ப்பகுதிகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

குன்னூர் வனப்பகுதிகளில் போதிய நீரின்றி வனவிலங்குகள் தவிப்பு

தற்போது கோடை காலத்தின் ஆரம்பகட்டத்திலேயே வெயில் அதிகரித்துவருவதால், வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக முதுமலையில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று குன்னூர் பகுதியிலும் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்து குடிநீர் நிரப்பும் பணியில் வனத் துறையினர் ஈடுபட வேண்டும் என அனைவரும் கோரிக்கைவிடுக்கின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details