நீலகிரி மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் உதகையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்து மோடியை பிரதமராக்கியது போன்ற தவறை இந்தத் தேர்தலிலும் மக்கள் செய்யக் கூடாது.
மத்தியில் ஆளும் மோடி ஆட்சியையும், தமிழ்நாட்டில் இருக்கும் அதிமுக ஆட்சியையும் கட்டாயமாக அகற்ற வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.