நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான உதகையில் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறையைக் கொண்டாட, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதோடு பைகாரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பளிச்சென்று கண்ணாடி போல் தூய்மையாக காட்சியளிக்கும் நீரில், படகு சவாரி செய்வதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைகின்றனர்.