நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1400 பேர் கரோனாவால் பாதிக்கபட்டுள்ள நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1070 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஆக்.25) காலை நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “நீலகிரியில் கரோனா வேகமாக பரவி வருவதால், சுற்றுலா பயணிகள் பயணத்தை தவிர்க்கவும். தடையை மீறி வருபவர்கள் மாவட்ட எல்லையில் திருப்பி அனுப்பப்படுவார்கள்.