தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகை 50 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து - பெண் உயிரிழப்பு; 17 பேர் படுகாயம் - ooty accident Engineer death

உதகை கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் டெம்போ ட்ராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் பொறியாளர் உயிரிழந்தார். மேலும், 17 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானதில்  சென்னை இன்ஜினியர் உயிரிழப்பு
ஊட்டியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வேன் விபத்துக்குள்ளானதில் சென்னை இன்ஜினியர் உயிரிழப்பு

By

Published : Jul 3, 2022, 7:03 AM IST

Updated : Jul 3, 2022, 7:30 AM IST

நீலகிரி:சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 18 பேர், உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு கல்லட்டி அருகே உள்ள தனியார் விடுதியில் தங்குவதற்காக சென்றுள்ளனர்.

15ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது, அவர்களின் டெம்போ ட்ராவலர் வேன் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில் 14 ஆண்கள், 4 பெண்கள் உள்பட 18 பேர் பயணித்த நிலையில், திருநெல்வேலியை சேர்ந்த முத்துமாரி (24) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், 17 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்தவர்கள் உதகை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தண்ணீர் பாத்திரத்தில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

Last Updated : Jul 3, 2022, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details