நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் (பிப். 06) நடைபெற்றது. இதைத் தொடக்கி வைப்பதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார்.
அப்போது அமைச்சர், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அரசு அலுவலர்கள் ஆகியோர் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்டார். இதனிடையே, கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு தான் அணிருந்த காலணிகளை கழற்றுமாறு அருகிலிருந்த பழங்குடியின சிறுவனிடம் கூறினார்.
இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பழங்குடியினர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் உடனடியாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பாதிக்கப்பட்ட சிறுவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை என்றும் தனது பேரன் போல் இருந்ததாலேயே அச்சிறுவனை அழைத்து காலணியை கழற்றுமாறு கூறியதாக அமைச்சர் சீனிவாசன் விளக்கமளித்தார்.
இந்நிலையில், தெப்பக்காட்டைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியினர், உதகையில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் தங்கியிருந்த அமைச்சரை காண வருந்திருந்தனர்.