தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தாக்கம்: வருமானமின்றி தவிக்கும் சிம்ஸ் பூங்கா வியாபாரிகள்

கரோனா தொற்றின் தாக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிம்ஸ் பூங்கா வியாபாரிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

By

Published : Jun 20, 2021, 8:13 AM IST

கரோனா தாக்கம்: வருமானமின்றி தவிக்கும் சிம்ஸ் பூங்கா வியாபாரிகள்!
கரோனா தாக்கம்: வருமானமின்றி தவிக்கும் சிம்ஸ் பூங்கா வியாபாரிகள்!

நீலகிரி:குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பழக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவின் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

குன்னூர் சிம்ஸ் பூங்கா வியாபாரிகள் வேதனை

இங்கு வரும் வெளிநாடு, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளின் வருகையால் 800க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலத்தில் உள்ள தொழிலாளர்கள், வியாபாரிகள், ஓட்டுநர்கள், உணவக உரிமையாளர்கள் அதிக வருவாய் பெற்று வந்த நிலையில் தற்போது ஊரடங்கால் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இவர்களுக்கு இதுவரை அரசு, தன்னார்வ அமைப்புகள் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. வருமானம் இன்றி தவிக்கும் இவர்களுக்கு அரசு நிதி உதவியும், பொருளுதவியும் அளிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'லாக் டவுன் முடிந்தவுடன் வந்து விடுவேன்'- சசிகலா

ABOUT THE AUTHOR

...view details