தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2019, 8:27 AM IST

ETV Bharat / state

மண் சரிவால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் பயணம்

குன்னூர்: கனமழை காரணமாக ஏற்படும் மண் சரிவால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே மலைப்பாதையில் பயணம் செய்யும் நிலை‌ ஏற்பட்டுள்ளது.

sand
sand

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் ஏற்கனவே மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுவது வாடிக்கையாக உள்ளது.

இதனையடுத்து வாகன ஒட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் அச்சத்துடனே பயணம் செய்துவருகின்றனர். மேலும் விழுந்த பாறைகள் சாலைகளில் அகற்றாமல் உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையில் கிடக்கும் பாறைகளை அப்புறபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண் சரிவால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் பயணம்

ABOUT THE AUTHOR

...view details