கேரளாவில் கொரோனா, பறவைக் காய்ச்சல், குரங்கு காய்ச்சலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 10 நாள்களாக தமிழ்நாடு கால்நடைத் துறை அலுவலர்கள் தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியில் எட்டு சோதனைச் சாவடிகள அமைத்து தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கோழிகள், காடைகள், வாத்து, கொண்டுவர தடைவிதித்தனர்.
தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் பறவைக்காய்ச்சல் பரவிவிட்டதாக வதந்தி பரவியுள்ளது.