தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகை அருகே குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு - காவல்துறை விசாரணை! - தமிழ் குற்றச் செய்திகள்

நீலகிரி: உதகை அருகே தலையாட்டு மந்து பகுதியிலுள்ள குளத்தில் 40 வயது மதிக்கதக்க அடையாம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

recovery-of-unidentified-male-corpse-in-a-pond-near-udagai
recovery-of-unidentified-male-corpse-in-a-pond-near-udagai

By

Published : Sep 2, 2020, 3:59 AM IST

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தலையாட்டு மந்து பகுதியில் ஒரு தனியார் விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக அந்த தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலில் பேரில் தீயணைப்பு துறையினருடன் அங்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபர் யார்? என்பது குறித்தும், அந்நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? எனவும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தடையை மீறி திருவிழாவில் கலந்துகொள்ள வந்த ஏழு பேர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details