நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள தலையாட்டு மந்து பகுதியில் ஒரு தனியார் விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக அந்த தோட்டத்தின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலில் பேரில் தீயணைப்பு துறையினருடன் அங்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர். இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.