தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு - பொதுமக்கள் அச்சம் - python caught nilagiri latest news

நீலகிரி: மஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதி அருகே நுழைந்த மலைப்பாம்பைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி
நீலகிரி

By

Published : Dec 11, 2020, 3:24 PM IST

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு அருகே மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து குந்தா வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், அப்பகுதியில் உள்ள பாம்பு பிடிக்கும் இளைஞர்கள் உதவியுடன் மலைப்பாம்பை பிடித்து அருகேயுள்ள வனப்பகுதிக்குள் விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.


இதையும் படிங்க: கிணற்றில் கிடந்த மண்ணுளிப் பாம்பு மீட்பு

ABOUT THE AUTHOR

...view details