நீலகிரி:வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில், ஒரு பெண் சிங்கம் உயிரிழந்ததைத் தொடர்ந்து நீலகிரி முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இன்று வளர்ப்பு யானைகள் முகாமை ஆய்வு செய்த புலிகள் காப்பக கள இயக்குநர் கௌசல், வளர்ப்பு யானைகள் முகாமில் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனச்சரகர், கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கௌசல், "வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் கடும் கட்டுபாடுகள் விதிக்கபட்டுள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கரோனா தொற்று இல்லை.