நாடு முழுவதும் தற்போது கரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் பல விதிமுறைகளை மாநில அரசு கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்தளங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள், சலூன்கள் உள்ளிட்டவைகள் அரசால் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் பகுதியில் கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட சிகை திருத்தும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.