நீலகிரி: உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. அதில் 33ஆவது வார்டு பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் அங்கு மக்கள் அதிகமாகப் பயன்படுத்திவரும் ஹெச்.எம்.டி. - நொண்டிமேடு சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சீரமைக்கப்படாமல் உள்ளது.
மழைக் காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்குவதால், சில சமயங்களில் வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன. பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்குப் புகார் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.