நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் கடந்த 16ஆம் தேதி அன்று காயங்களுடன் சிறுத்தையை கண்ட பூங்கா பணியாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி மற்றும் வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த சிறுத்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த சிறுத்தையை வனத்துறையினர் பாதுகாப்புடன் பிடித்து மருத்துவ சிகிச்சைகாக உதகை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். கடந்த 13 நாள்களாக சிறுத்தைக்கு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் வெடியப்பன் தலைமையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.