நீலகிரி மாவட்டம் உதகையில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் (Boat house), தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில் படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
நீண்ட காலமாக உதகை நகரின் கழிவு நீர் படகு இல்ல ஏரியில் கலந்து வந்ததாலும், மோட்டார் படகு சவாரியாலும் தண்ணீர் அசுத்தமானதுடன் துர்நாற்றம் வீசிவந்தது, இதனால் உதகை படகு இல்ல ஏரியை தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளிலேயே மிகவும் மோசமான ஏரி என மாசு கட்டுப்பாட்டு துறை தெரிவித்திருந்தது. அதனையடுத்து கழிவு நீரானது நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.