தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடலூர் பகுதியில் சிறுத்தை பலி - வனத்துறையினர் விசாரணை! - nilgris panther death

கூடலூர் பகுதி தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

nilgris-panther-death
nilgris-panther-death

By

Published : Jul 27, 2021, 9:34 PM IST

நீலகிரி: கூடலூரை அடுத்த சேரம்பாடி பத்தாவது லைன் நான்கு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தேயிலை தோட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று எந்தவொரு அசைவுமின்றி இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மருத்துவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுத்தைக்கு சிகிச்சையளிக்கும் போது அது உயிரிழந்தது.

சிறுத்தை இறந்தது குறித்து உடற்கூராய்வுக்கு பிறகு தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுத்தை இறந்த இடத்தை வனத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: ஊருக்கு பாதை இல்லை... மாயாற்றில் இறங்கி உடலை எடுத்துச் செல்லும் அவலம்

ABOUT THE AUTHOR

...view details