தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலை ரயில் சேவை - ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது

நீலகிாி: நீலகிாி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த குன்னுாா்-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை தற்போது தொடங்கியுள்ளது.

nilgiri mountain passenger train

By

Published : Oct 26, 2019, 1:03 PM IST

நீலகிாி மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் மண்சாிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலை ரயில் பாதையில் ஆங்காங்கே பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

குன்னுாா் முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது.

குன்னுாா்-மேட்டுப்பாளையம் ரயில் சேவை தொடங்கியது

இந்த நிலையில் மழையின் சீற்றம் குறைந்ததைத் தொடர்ந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைத்துள்ளனர்.

இதையும் படிக்க: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நீராவி எஞ்சின்: குன்னூர்-உதகை இடையே சோதனை ஓட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details