தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலச்சரிவை தடுக்க அரிய வகை புல் - குன்னூரில் புதிய முயற்சி - நீலகிரியில் விபத்தை தடுக்க புதிய வழிமுறை

நீலகிரி: குன்னூரில் நிலச்சரிவை தடுக்கும் விதமாக அரிய வகை புல் வகைகள், சோலை மரக்கன்றுகள் உள்ளிட்டவற்றை நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

socialist
socialist

By

Published : Jan 13, 2020, 7:37 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் பல்வேறு இடங்கள் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், லெவல் கிராசிங் அருகே இடைச்சேரி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் நோக்கில், வருவாய்த்துறையினர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

அந்த வகையில்நிலச்சரிவிலிருந்து காப்பாற்றும் அரிய வகை கிரிசோ போகன் நோடோலிபார்ப் புல் வகை உள்ளிட்டவற்றை குன்னூர் பகுதிகளில் நடவு செய்யும் பணியை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தை தடுக்க மரக்கன்றுகள் நடும் சமூக செயற்பாட்டாளர்கள்

இதே போன்று குன்னூரை பசுமையாக மாற்ற ஜெயின் இளைஞர்கள் நல சங்கம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில், இந்தப் பகுதியில் அரிய வகை மரங்களான ஜகரண்டா, போடோகார்பஸ் கோல்டன் சிப்ரஸ் உள்ளிட்ட சோலை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த மரக்கன்று நடவு செய்யும் பணியைகூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங்தொடங்கிவைத்தார்.

வளைகுடா நாடுகளில் இந்தியா சந்திக்கப் போகும் சவால்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details