தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 27, 2022, 8:37 PM IST

ETV Bharat / state

POLIO DROPS CAMP: விடுபட்ட குழந்தைகளுக்கு வீடு தேடிச்சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு - அமைச்சர்  ராமச்சந்திரன்

குன்னூர் எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை வனத்துறை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

polio drops camp at coonoor  forest minister inaugurate polio drops camp at coonoor  polio drops camp at tamil nadu  polio drops camp  polio drops  minister of forest Ramachandran  போலியோ சொட்டு மருந்து  போலியோ சொட்டு மருந்து முகாம்  குன்னூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்  தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம்  வனத்துறை அமைச்சர்  சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த வனத்துறை அமைச்சர்
போலியோ சொட்டு மருந்து முகாம்

நீலகிரி: தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்ரவரி. 27) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன.

இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் இம்முகாமினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'மாவட்ட மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குன்னூரில் போலியோ சொட்டு மருந்து முகாம்

777 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 40 ஆயிரத்து 890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணிகளில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கத்தினர் உட்பட 3 ஆயிரத்து 203 பேர் ஈடுபடுகின்றனர்.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்துவரும் இரண்டு நாட்களில் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பார்வையிட்டு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எவ்வித பின்விளைவுகளும் ஏற்படாது. எனவே பெற்றோர்கள் தங்களின் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்து இருந்தாலும், இன்று (பிப்ரவரி. 27) மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயனடையலாம்’ என்று கூறியிருந்தார்.

இதையும் படிங்க: போலியோ சொட்டு மருந்து முகாம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

ABOUT THE AUTHOR

...view details