தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவின்றி தவிக்கும் பழங்குடியினர்! - நீலகிரியில் உணவின்றி தவித்துவரும் குன்னூர் பழங்குடியினர்

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள பம்பலக்கொம்பை பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த பழங்குடியினர் உணவின்றி தவித்துவருகின்றனர்.

குன்னூர் பழங்குடி மக்கள்
குன்னூர் பழங்குடி மக்கள்

By

Published : May 2, 2020, 1:52 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் பழங்குடியினர் வசித்துவரும் பம்பலக்கொம்பை கிராமம் உள்ளது. இப்பகுதியில் சுமார் 42 குடும்பத்தினர் தைலம் உற்பத்தியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அவர்கள் தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வேலை இழந்து, வருமானமின்றி தவித்துவருகின்றனர். அரசு சார்பாக அத்தியாவசிய பொருள்களும் குறைந்த அளவே வழங்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், குழந்தைகளுக்குத் தேவையான பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல், உண்ண உணவின்றி தவித்துவருகின்றனர். அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

குன்னூர் பழங்குடி மக்கள்

ஊரடங்கின் காரணமாக உணவின்றி தவித்துவரும் தங்களுக்காக அரசு அலுவலர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அரசு உதவி கிடைக்காததால் வனப் பொருள்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் பழங்குடியினர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details