நீலகிரி: தேயிலை கொள்முதலை நிறுத்திவைத்திருக்கும் நிறுவனங்களை உடனே கொள்முதல் செய்ய தென்னிந்திய தேயிலை வாரியம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
கோத்தகிரியில் தேயிலை விவசாயிகளிடமிருந்து கடந்த 10 நாள்களாக பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்யாமல் தேயிலை நிறுவனங்கள் இருந்துள்ளன.
இதனைக் கண்டித்து நாக்குபெட்டா விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமையில் இன்று (அக்.10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.