தமிழ்நாடு

tamil nadu

கொடநாடு கொலை வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத 8 பேருக்கு பிடிவாரண்ட்

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோவை சிறையில் உள்ள சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

By

Published : Aug 22, 2020, 12:30 AM IST

Published : Aug 22, 2020, 12:30 AM IST

kodanadu case
kodanadu case

கொடநாடு பங்களாவில் காவலாளி மற்றும் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேரில், சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், விசாரணைக்கு ஆஜராகாத ஜம்சீர் அலீ, மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, தீபு, பிஜின்குட்டி உள்பட 10 பேருக்கு பிணையில் வெளியில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

பணம் பத்து செய்யும்

நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த சயான் மற்றும் வாளையாறு மனோஜ் பணம் பத்தும் செய்யும், கூடலூரை சேர்ந்த மர வியாபாரி சஜீவன் மற்றும் அவரது தம்பிக்கு கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புள்ளதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: காவல் ஆணையர் அகர்வால் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details