நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருகிறது. நாள்தோறும் 50-க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதிசெய்யபபடுகிறது. அதன் காரணமாக, நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதருகின்றனர்.
குறிப்பாக குன்னூர் பர்லியார் சோதனைச்சாவடி வழியாகச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கரோனா தொற்று பரிசோதனை எடுப்பதில்லை. ஆன்லைனில், நட்சத்திர விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்துவிடுகின்றனர்.