நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரிடர் பாதுகாப்பு மையமானது நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மையமானது சில மாதங்களுக்கு முன் அரசு போக்குவரத்து பணிமனையாகவும், விளையாட்டு அரங்கமாகவும் செயல்பட்டுவந்தது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் இதை பராமரிக்காமல் இருப்பதால், தற்போது இதன் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரின் கூடாரமாக மாறியுள்ளது.