நீலகிரியில் அடர்ந்த பனிமூட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - சுற்றுலாத்தலம்
நீலகிரி: குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

nilgiris
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரியில், இரண்டு நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவிவருகிறது. பகல் நேரங்களிலும் பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள், தங்கள் வாகனங்களில் நீண்ட நேரம் காத்திருந்து மலைப் பாதையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
அடர்ந்த பனிமூட்டத்தில் நீலகிரி
தொடர்ந்து பெய்துவரும் மழை, கடும் பனி மூட்டம் காரணமாக அங்கு கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பனிமூட்டத்தால் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.