நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (ஜனவரி 11) தொடங்கியது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேல் இணை நோயுள்ளவர்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 169 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 75 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.