தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் சுற்றுலா தலங்கள் திறக்க நடவடிக்கை - வனத் துறை அமைச்சர் - வனத்துறை அமைச்சர்

முதலமைச்சர், துறை அலுவலர்களுடன் ஆய்வுசெய்த பின்னர் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களைத் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

Forest Minister talks about opening of tourist place  tourist place  Forest Minister  opening of tourist place  tourist place opening  nilgiris news  nilgiris latest news  நீலகிரி செய்திகள்  சுற்றுலா ஸ்தலங்கள்  விரைவில் சுற்றுலா ஸ்தலங்கள் திறக்க நடவடிக்கை  வனத்துறை அமைச்சர்  சுற்றுலா ஸ்தலங்கள் திறக்க நடவடிக்கை
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

By

Published : Aug 23, 2021, 7:02 AM IST

நீலகிரி: குன்னூரில் 2021 - 22ஆம் நிதி ஆண்டிற்கான பயிர்க்கடன் வழங்கும் விழா குன்னூர் எடப்பள்ளி இளித்தொரை கிராமத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

இதில் 341 பயனாளிகளுக்கு ரூ.3.29 கோடி மதிப்பிலான வேளாண் பயிர்க் கடன்களை வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

வனத் துறை அமைச்சர்

விரைவில் நடவடிக்கை

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாத் தலங்களுக்குச் சில தளர்வுகள் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர், வனத் துறை அலுவலர்களுடன் ஆய்வுசெய்து, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணையில் இருந்து நீர் நிறுத்தம்: பொதுப்பணித்துறை

ABOUT THE AUTHOR

...view details